கிழக்கரியாலை உதயபுரம் பகுதியில் வாழும் மக்களின் நலன்கருதி சுகாதார தினைக்களத்துடன்; இனைந்து யாழ் றோட்றக்கழகம் கடந்த 30ம் திகதி (2012.09.30) நுளம்புவலைகளை வழங்கியது. இச்செயற்பாடானது எமது றோட்றக்கழகத்தின் அங்கத்தவர் மதன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது 120 குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டன.
அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களுடன் கதைத்த போது சில பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல குடும்பத் தலைவிகள் உட்பட அப்பகுதி மக்கள் பாரிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்துள்ள வருகின்றனர் என தெரியவந்தது. இதற்கு எம்முடன் வந்திருந்த பொதுச்சுகாதார அதிகாரி மதன் இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகானும் முகமாக அம்மக்களுடன் கதைத்து அதற்கேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அங்கு வசிக்கும் (பெயர் குறிப்பிட விரும்பாத) சிறுமி ஒருத்தி பாலர் பாடசாலை செல்வதில்லை என குற்றச்சாட்டு நிலவியது அதற்காண காரணத்தை கேட்ட போது சக மாணவர்கள் நுள்ளுகின்றனர் அதனால் போக மறுக்கிறார் என தாய் கூறினார். அச்சிறுமி தாய் அம்மம்மா என மூவரும் தான் அவ்வீட்டில் வசிக்கின்றனர். மிகச்சிறிய வீடு அடிப்படை வசதிகள் அற்ற நிலையே காணப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
இருப்பினும் அப்பகுதியில் நிதந்தரமாக மக்கள் வசிப்பதில்லை எனவும் அவ்வப்போது தான் வந்து பேகாகிறார்கள் அதுவும் ஏதாவது நிறுவனம் வந்து நிவாரணப் பொருட்கள் குடுக்கின்றனர் என்றால் வருவார்கள் பிறகு காணக்கிடைக்காது என குற்றச்சாட்டும் எழும்பியது. இவ்வாறு குற்றஞ்சாட்டும் போது அங்கு வந்த (பெயர் குறிப்பிட விரும்பாத) பெண்மணியிடம் ஏன் நீங்கள் இங்கு திதந்தரமாக வசிப்பதில்லை என்று கேட்டதற்கு வசதிகள் போதாது இப்போது தான் செய்து வருகிறோம் பின் எப்படி இங்கு இருக்க முடியும் என்றார்.
.jpg)
ஆனாலும் இப்படி எத்தனை இடங்கள் எவ்வளவு மனிதர்களை சந்திக்க வேண்டும்.
.jpg)
.jpg)