அழகென்றால் அவள்ள தானா

அழகு என்பது இறைவனது படைப்பிலே இயற்கையாகவே கொடுக்கப்பட்டது ஆனால் இவ் நாகரீகமான உலகில் அழகு என்பது அன்றாட தேவைகளை போல ஒன்றாகிவிட்டது பெண்கள் தம்மைத்தாமே அழகு படுத்திக்கொள்வதில் தமது நேரத்தையே வீணடிக்கின்றனர். ஓவ்வொருத்தரும் தமது விருப்பங்களுக்கு ஏற்றவாறும் காலநிலைக்கு ஏற்றவாறும் பேஷியல் செய்கின்றனர் நம் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதன் தரங்களும் தாக்கங்களும் அதிகரித்து செல்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

அத்தோடு பேஷியல் செய்வதனால் மன அமைதி ஏற்படுகின்றது என்றும் சொல்லலாம். கர்ப்பிணிப் பெண்கள் பேஷியல் செய்வதில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சொல்லப்படுகின்றது. பொதுவாகவே யாரையும் அமைதியாக ஒரு இரண்டு நிமிடம் இருக்கச் சொன்னால் இருக்க மாட்டார்கள் ஆனால் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேஷியல் செய்வதற்கு பெண்கள் கதைக்காமல் கண்களை மூடி அமைதியாக இருக்கின்றனர். பேஷியல் செய்யும் போது மனதை அமைதியாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம் மற்றவர்களால் றிலாக்சேஷன்(மசாச்)  கொடுக்கும் போது தானாகவே மனம் நிம்மதி அடையும் அது உடலுக்கு நிச்சயம் நல்ல பலனை தரும் என்பது யாராலும் மறுக்க முடியாது அத்துடன் பேஷியல் செய்வதற்கென இருக்கும் இடங்களை பார்த்தோம் ஆனால் அவை பொருவாக மங்கலான நிறங்களை உடையனவாகவே இருக்கும்.

முன்னைய காலத்திலும் பெண்கள் தங்களை அழகு படுத்த துளசி, தக்காளை, வேப்பந்துளிர், மஞ்சள்  போன்ற பலவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர் அவை அப்போது எந்த விதமான பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை ஆனால் இப்போது தயாரிக்கப்படும் அழகு சாதனப்பொருட்களை தயாரிக்கும் திறமையானது மெருகூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றே சொல்லவேண்டும். போட்டி போட்டுக்கொண்டு தமது வியாபாரத்திற்காக தயாரித்து விளம்பரத்திற்காக பிரபலமானவர்களை நாடி விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன் பாதிப்பு என்பது உபயோகிக்கும் போதும் அதன் பலன் வெளிப்படும் போதும் தெரிவதில்லை அதன் விழைவானது பல நாட்களின் பின்போ அல்லது இனி தேவையில்லை என்று பாவிக்காமல் விடும் போதோ வெளிப்படுகின்றது அவர்களுக்கே தெரியாமல் முகம் மாறிப்போகின்றது.

இதில் தவறு என்னவென்றால் சரியான முறையை கையாளாமை என்று சொல்லலாம் கவர்ச்சியான உடலமைப்பும் முக அழகும் வேண்டும் என்று சில காலகட்டத்தில் நினைக்கும் பெண்கள் சரியான ஆலோசனை பெறாமல் தாமாக ஒரு விடயத்தில் முடிவெடுத்து  விளைவுகளை காசுகொடுத்து வாங்குகின்றனர். இதனால் சிலருக்கு ஒவ்வாமை புற்றுநோய் ஏற்படுவதுடன் சில சந்தர்ப்பங்களில் பெண்மையை இழக்கச் செய்கின்றது இராசயனக்கலவைகள் அதிகமாக பயன்படுத்தப்படும் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்த கூடாது என்று சொல்லப்படுகின்றது
முக்கியமாக வெளிநாட்டில் இருந்து வருகை தருபவர்கள் தங்கள் கால நிலைக்கு தகுந்தாற் போல் பாவிக்கும் சில அழகுப்பொருட்களை இங்கு இருப்பவர்களுக்கு கொடுக்கும் போது அவர்கள் அதனை பயன்படுத்தும் ஒரு நிலை ஏற்படுகின்றது இதன் போது பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது.


அத்துடன் தலைமுடியை அழகு படுத்த என மிஷின்களை பயன்படுத்துவது என்பது ஒருவகையான மோகமாகவே உள்ளது. அது மட்டுமில்லாமல் தலைமுடி வளர வேண்டும் என பாவிக்கும் ஒயில்கள் தமக்கு பொருந்துமா இல்லையா என்று கூட யோசிப்பதில்லை உதட்டுக்கு பூசப்படும் லிப்டிக்ஸ் வாய்க்குள் போகும் போது எவ்விதமான நோய்களை உருவாக்கும்  என்பது பலருக்கு தெரியாது. ஆனால் அடுத்தவர்கள் பாவிக்கிறார்கள் நாமும் பாவித்தால் என்ன என்று தாமாக சிந்தித்து பாவிக்க தொடங்குகின்றனர்.

அழகு சாலைகள் அதிகரிக்க முக்கிய காரணம் இந்த வெளிநாட்டு மோகம் என்று தான் சொல்ல வேண்டும். காரணம் வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து திருமணமாகுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று பேஷியல் வகுப்புகளுக்கு செல்கின்றனர். பேஷியல் வகுப்பொன்றில் கல்வி கற்கு மாணவர்களிடம் போய் கதைத்து பார்த்தால் அதிகமாணவர்கள் சொல்லும் பதில் எனக்கு வெளிநாட்டில் திருமணமாகி விட்டது நான் இன்னும் சில மாதங்களில் சென்று விடுவேன் எனக்கு இவை தேவை தானே அதனால் தான் படிக்கிறேன் என்பார்கள். பிறகு சில சமயங்களில் அவர்களால் போக முடியாமல் போகும் பட்சத்தில் அவர்கள் சொந்தமாக ஒரு அழகுநிலையம் தொடங்குவார்கள் இப்படி பலரும் தொடங்கும் பட்சத்தில் போட்டி அதிகமாகுமே தவிர யாரும் அழகாக போவதில்லை.

இயற்கை மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில் எந்த பாதிப்பும் வராது என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் அவையை இனங்கான்பதென்பது நம் இளம் சமூகத்தினர் மத்தியில் பெரும் சவாலான ஒன்றாகவே இருக்கின்றது இயற்கை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் சில அழகுசாதனப் பொருட்களும் பல இராசாயனங்கள் சேர்க்கப்பட்டுக் கொண்டிருப்பது இதன் காரணமாக இருக்கலாம். அத்துடன் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு வகையான உணவுகளும் எமக்கு அழகினை சேர்ப்பது என்றே சொல்லலாம்
இயற்கை அழகு யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லை ஒருவர் அழகாக இருப்பதற்கு மனம் தான் முக்கிய காரணம் மனம் சந்தோசமாகவும் அழகான சூழல், சுற்றத்தார் கிடைத்தால் போதும் ஒருவர் இயற்கை அழகாக இருந்து விடலாம்..


 பலரின் மன அழகுச்சாலைகள் திறந்தால் போதும் அதிகரிக்கும் அழகுநிலையங்கள் தானாக மூடிக்கொள்ளும்.

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..