யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவத்தினர் உள்நுழைந்து மாணவர்களிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சுமத்தி பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த புதன்கிழமை (28.11.2012) நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இராணுவம் மற்றும் பொலிஸாரினால் பல மாணவர்கள் தாக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் சுடர் ஏற்றப்பட்டதாகக் குற்றம் சுமத்தி இராணுவத்தினர் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து மாணவர்களைத் தாக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தில் பதற்றம் நிலவியது.
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் சுடர் ஏற்றப்பட்டதாகக் குற்றம் சுமத்தி இராணுவத்தினர் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து மாணவர்களைத் தாக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தில் பதற்றம் நிலவியது.