தங்குவதற்கு இடம் இருந்தால் மட்டும் போதுமா? ஆமாம் போதும் உயிர் வாழலாம் என வாழ்ந்து வருகின்றனர் காரைதீவு பிரதேச மக்கள் கடற் தொழிலை பிரதாணமாக கொண்டு வாழ்ந்து வரும் இப்பிரதேச மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர் என்பதை அறிந்தால் எம் நாட்டின் எதிர்காலம் எங்கு போகின்றது என்பது கேள்விக்குறியே?
கடற்கரையில் குடியிருக்கும் மக்கள் தண்ணீரிற்கு தந்தியடிக்க வேண்டிய நிலைதான் ஏற்படுகிறது வீடுகளில் கிணறு இல்லை அவ்வாறு இருந்தாலும் கிண்றுக்குள் தண்ணி இல்லை அவ்வாறே இருந்தாலும் எமது வீடுகளில் களிவுநீர் இருக்கும் நிலையில் தான் உள்ளது அத்துடன் மலசல வசதியும் இல்லை இவ்வாறு இருந்தால் அப்பிரதேச மக்களுக்கு நோய் ஏற்படாமல் என்ன ஆகும். இத்தனைக்கு மத்தியில் மக்களுக்கிடையில் பல பிரச்சனைகள் ஒழிந்துள்ளன அயலவர்களின் உதவிகள் சிலருக்கு கிடைப்பதில்லை சாதி பார்ப்பது என தமது பிரச்சனைகளை தாமே வளர்த்துக்கொள்கின்றனர் அப்பிரதேச மக்கள்.
காரைதீவு கிhமத்துக்கு செல்லும் போதே கிராமம் என்றால் இவ்வாறுதான் இருக்கும் என்ற ஒரு கனவுடன் உள் நுளைந்தேன் ஆனால் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு உணர்வுகளை அக்கிராமம் தட்டியெழுப்பியது. ஒரு ஒழுங்கையால் உள் சென்றபோது வேடிக்கை பார்த்தபடி தன் வீட்டு வாசலில் செல்வராஜா (வயது 58) நின்றார் அவரிடம் சென்று கதைத்தபோது இங்;கு கடல்தொழிலாழர்களே அதிகம் இருக்கின்றார்கள் நான் குருநகரில் உள்ள நண்டு உடைக்கும் தொழில் சாலையில் தொழில் புரிகிறேன் இடம்பெயர்ந்து போய் இங்கு வந்து 15 வருடங்கள் ஆகின்றன ஆனாலும் இன்னும் இக்கிராமத்து மக்கள் முழுமையாக குடியேறவில்லை இப்போது தான் குடியேறிவருகின்றனர். நான் மாடு வளர்க்கிறேன் எனக்கு பிரச்சனை எனும் போது தண்ணீர் தான் இங்கு அயலவர்களின் உதவி என்பது கிடையாது தாங்களும் தங்கடபாடுமாக இருப்பார்கள் தமது தேவைக்கு மட்டுமே கதைப்பார்கள் என்று கூறிமுடித்தார் செல்வராஜா.

அப்பிரதேச மக்களுக்கு தண்ணீர் பிச்சனை வழமையாக இருந்தாலும் சிறுவயது திருமணம் சாதிப்பிரச்சனை என தம்மைத்தாமே முன்னேற விடாமல் கட்டிப்போடுகிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது. ஒரு வீட்டில் கிணறு உள்ளது ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் போய் பாவிக்க முடியாது அவர்கள் வேறு இடத்திற்கு சென்று தான் எடுக்கவேண்டும் கேட்டால் சாதியை காரணம் காட்டுகிறார்கள் இவ்வாறு எமது நாட்டில் எவ்வாறான பிரச்சனைகள் இன்னும் உள்ளனவோ.