கலைகள் ஒரு பண்பாடு


தமிழர்களின் நாட்டுப்புற கலைகளில் இதிகாச நிகழ்வுகளை உணர்த்தக் கூடிய கலைகள் ஏராளம் உண்டு. அவற்றில் முக்கியமானது பறையாட்டம். பறையாட்டம் என்றதுமே தமிழர்களில் பெரும்பாலாணவர்களுக்கு ஞாபகம் வருவது மரணச்சடங்கு. 21ம் நூற்றாண்டாம் இன்று தமிழர்களில் பெரும்பாலாணவர்களுக்கு பறையாட்டமஇ; ஒயிலாட்டம்இ சாட்டைக்குச்சியாட்டம் தொடர்பாக அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. சில இடங்களில் அறிந்திருந்தாலும் பிற மாவட்டங்களில் கிட்டத்தட்ட வடக்கொழிந்து போய்விட்ட நிலையில் தான் இருக்கின்றது.

நாம் அண்மையில் தமிழ் நாட்டிற்கு சென்ற போது முற்றம் என்னும் கலைக்கோயிலின் கீழ் ஆசிரியராக உள்ள ஆடலரசு இக் கலைகள் தொடர்பாக சிறிது கூறினார். இவர் சிறு வயதிலிருந்தே இக்கலைகளை முறையாகக் கற்றவர். கிராமியப் பாடல்கள் எழுதி பாடி ஒரு தடம் பதிக்க வேண்டும் என்பதும் இக்கலையை வெற்றிபெற வைக்கவேண்டும் என்பது தான் இவரது ஆசை. அதற்க்காக இத்துறை சார்ந்த பலரை தேடிப்போய்த் தன் திறமையை மேம் படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். ஆடலரசு பிறந்த இடம் ஒரு சாதாரண கிராமம் தான் அக்கிராமத்திலே படித்த முதல் பட்டதாரி ஆடலரசு தான். சட்டம் படித்தவர் எவ்வாறு முற்றம் என்னும் நாடகக் கலையை கொண்டு நடத்துகிறார் என்பது ஆச்சர்யம் தான். ஆடலரசு எப்படி ஆடுகிறார் என்றும் எவ்வாறு இக்கலையை கொண்டு நடத்துகின்றார் என்பதையும் நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.பறையாட்டம் பற்றி கூற வேண்டுமானால் இலங்கைத்தமிழ் சமுகத்தைப் பொறுத்தவரையில் மெல்லிசை மரபாணது அவ்வப்போது செழிப்புள்ள ஆளுமைகளது முயற்சியால் குறிப்பிடத்தக்க வரலாற்று போக்கினை கொண்டிருக்கின்றது. ஆனால் பறையாட்டம் என்பது மரணச்சடங்குகளிலும் சில காளி கோயில்களிலுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நாகரீக வளர்ச்சியால் அதிகம் பாதிக்கப் படாதவர்கள் இன்னும் இதை பாதுகாக்கின்றனர் என்பது வியப்பே.     சாட்டைக்குச்சியாட்டம் என்பது மாடு மேய்ப்பவர்களும் வயலில் வேலை செய்யும் பெண்களும் தமது களைப்பைப் போக்கிக் கொழ்வதற்காக ஆடப்பட்டு வருகின்றது. தாமாக பாடலைப்பாடிக் கொண்டு தமது பாடலின் மெட்டுக்கேற்றவாறு குச்சிகளால் தட்டி ஆடுவார்கள்.அடுத்து ஒயிலாட்டம் ஒயிலாட்டம் என்பது மதுரை மாவட்டத்தில் ஆண்கள் கைகளில் கைக்குட்டைகளை வைத்து ஆடுவதிலே இவ் ஆட்டம் ஆரம்பமாணது. கதைகளைப் பாட்டின் முலம் சொல்லி தாண்டவமுறையில் ஆடுவர். வள்ளி கல்யாணம் இராமாயணம் போன்ற கதைப்பாடல்களின் இசை ஒயிலாட்டத்தில் சிறப்புட்டும். ஆண்களால் மட்டும் ஆடப்பட்ட இந்நடனம் இக்காலத்தில் பெண்களாலும் இணைந்து ஆடப்பட்டு வருகின்றது. நம்மவரிடையே இவ்வாறாண கலைகளை கட்டிக்காக்கும் முயற்சி ஆங்காங்கே தனி முயற்சிகளான சில வற்றையே காண முடிகின்றது. இவ்வாறாண கலைகள் தம்மை நிலை நிறுத்திக் கொள்வதற்கு இசை அலகைப் படுத்திக் கொண்டிருக்கின்றது. வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இக்கால சமுகஓட்டத்திற்கேற்ப ஒவ்வொரு பண்பாடும் தன்னைத் தக்கவைத்துக்கௌ;;வது என்பது சவாலாகிப் போய்க்கொண்டிருக்கின்றது. மாற்றங்களுக்கு ஏற்ப தகவைப்பும் அவசியம் ஆனால் எமக்குரிய தனித்துவங்கள் அடையாளங்கள் கால ஓட்டத்தில் அள்ளுண்டு போய் விடுதல் ஆகாது. நம் மரபினைப் பொறுத்த வரையில் எத்தனை சவால்கள் இருந்தாலும் அத்தனைக்கும் இடம் கொடுத்து செல்ல வேண்டிய ஒரு பண்பாட்டு சமுக நிலையைக் கொண்டிருக்கின்றது எனவே எமக்குரிய பண்பாட்டு வேர்களை அழிய விடாது காத்துக்கொழ்வதோடு நின்று விடாது சரியாண வகையில் சந்ததிக்கு சந்ததி ஏற்படுத்திக் கொடுத்தல் அவசியம் ஆகும். 

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..