- தமிழர்களின் நாட்டுப்புறக்கலைகளில் இதிகாச நிகழ்வுகளை நிகழ்த்தக்கூடிய கலைகள் ஏராளம் உண்டு.
காளிளியாட்டம் என்னும் போது வழிபாடு, நம்பிக்கை, மரபு ரீதியாக அல்லது பொழுது போக்கை காரணம் காட்டி தோன்றியிருக்கலாம். காளிவேடம், காளி திருநடனம், காளி வீதிஉலா எனப்பல கொபயர்களில் அழைப்பர். அம்மன் கோயில்களில் மகாபாரதக்கதை தவறாமல் நடக்கும். அப்போது அர்ஜீனன் மகனான அரவானை காளிக்கு பலி கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்கும். பலிகொடுக்கும் வேடத்தில் நடிப்பவர் காளிவேடமிட்டு ஊரைச்சுற்றி ஆடிக்கொண்டே வருவார். இக்காளிதேவியை ஒருவர் கயிற்றால் இடுப்பில் கட்டிப்பின்புறமாக பிடித்து வருவார். இதன் போது ஊரிலே யாருக்காவது அணங்குபிடித்திருப்பின் அல்லது ஊரில் தீயசக்திகள் இருப்பின் நீங்கி தமது வேண்டுதலும் நம்பிக்கைகளும் நிறைவேறும் என்பது இவர்களின் ஜதீகம்.
பண்டய கிராமத்து கோவில்களில் காளியாட்டம் நிகழ முன் ஆலயத்தின் முன்பாக 25 அடி நீளத்திற்கு மிகப்பெரிய அரவான் உருவம் படுத்திருப்பதைப்போலவும் அதன் அருகே மிகப்பெரிய காளி உருவமும் மண்ணால் செய்வர் பூஜை தொடங்கும் போது காளி உருவத்தின் முன் கோழி ஒன்றைப்பலி கொடுப்பர். பின்னர் அராவனர் உருவத்தின் மேல் பூசணிக்காய் ஒன்றை வைத்து துண்டாக வெட்டி எறிய கோவில் பூசாரி துரோபதை வேடமிட்டு அரவாணனைச்சுற்றிக்கொண்டு தன் மார்பில் அடித்தவாறே பாட்டுப்பாடி ஒப்பாரி வைப்பார்.
இக்காளிவேடம் தஞ்சைமாவட்டப்பகுதிகளில் தான் மிகவும் பிரபல்யம். முரத்திலே செய்யப்பட்ட ஆறு கைகள் அவற்றில் வாள், சூலாயுதம் ஏந்தியபடியே ஆடுவது உண்மையில் மகத்தானதாகும். இவ்வாறு காளிவேடம் போடுபவர்கள் எந்தக்கோயிலில் காளிவேடம் போடுகிறார்களோ அக்கோயிலின் திருவிழாக்கள் தொடங்கிமுடியும் வரை விரதமிருப்பர். தமிழகத்தைப்போன்றே கேரளாவிலும் காளிதேவிவேடமிட்டு ஆடும் விழா நடைபெறுகின்றது.