என் இந்திய அனுபவம்


நான் இந்தியப் பயணத்தின் போது பல புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு நாளும் எனக்கு புதுப் புது விடயங்களை கற்றுத்தந்ததோடு என்னில்                 சில மாற்றங்களையும் தந்தது.

விமாணம் மூலம் பயணம் சென்றது முதல் தடவை என்பதனால் சிறு பதட்டம.; இருந்தாலும் நண்பர்களுடன் சென்றதனால் சமாளித்துக்கொண்டேன். முதல் விமாணப் பயணம் புது அனுபவத்தை தந்ததுடன் ஏராளமான விடயங்களை கற்றுத்தந்தது. இந்திய மண் மிதித்ததுமே இந்திய மாணவர்கள் இலங்கை மக்கள் தொடர்பாக எவ்வாறு கருதுவர் எம்நாட்டு மக்களை முக்கியமாக எங்களை எவ்வாறு நினைப்பார்கள் என்ற எண்ணம் எனக்குள் உதித்தது. ஆனால் சென்னை விமாண நிலையத்தில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் எம்மை வரவேற்க வந்திருந்தனர் அவர்கள் எம்மை வரவேற்ற முறையும் எம்க்காக இரவு உணவுகளை பரிமாறியமையும் பயத்தை குறைத்ததுடன்  வரவேற்கத்தக்கது. அதன் பின்னர் எனக்குள் இருந்த பதட்டம் காணாமலே போனது.


           காலை உடற் பயிற்சி மெரீனா கடற்கரை நோக்கிய ஒரு பயணம.; சொல்லவே தேவையில்லை தனி உற்சாகம் தான். இதற்கு முன்னர் யோகாசனப் பயிற்சி நான் செய்திருந்தாலும் புது உற்சாகம் தான். சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு முதல் நாள் சென்றபோதே ஏதோ ஒரு மகிழ்ச்சி அழகாண கட்டிடங்கள் பல மாணவர்கள் இங்கெல்லாம் நானும் வருகின்றேனோ என்று எனக்குள் ஏதோ கற்பனை.
               முதல் நாள் விரிவுரை முடிந்ததும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுடன் சேர்ந்து சேரிப்புறத்திற்குள் ஒரு ஆய்வு எடுப்பதற்காக சென்றோம.; நாம் சென்றது மீனவக்குப்பத்திற்கு அப்பிரதேச மக்களை சந்தித்தமை முதலில் ஏதோ ஒரு வெறுப்பைத் தந்தாலும் பின் அவர்கள் தொடர்பாக அறிய வேண்டும் என்ற ஆர்வம் கூடியது. சேரிப்புற மக்களை சந்தித்து கதைத்தமையாணது ஏதோ புது விடயங்களை கற்றுத்தந்ததோடு சகிப்புத்தன்மையையும் கற்றுத்தந்தது.
அப்பிரதேச மக்களை சந்திக்கும் முன்னர் இந்தியர்கள் என்றால் ஏதோ ஒரு எண்ணம் வசதியாணவர்கள் அழகாணவர்கள் என்று இருந்தது. இதன் பின்னர் அவர்களது இன்னொரு முகம் அதாவது இந்தியர்களது வறுமையையும் சில சமயங்களில் அவர்களது உணர்வுகளையும் என்னால் ; உணர்ந்து கொள்ள முடிந்தது. குளுவாகப் பிரிந்தே ஒவ்வொரு சேரிப்புறத்திற்கும் சென்றிருந்தோம் ஏணைய மாணவர்கள் சென்ற இடங்களையயும் அறிய ஆவலாக இருந்தது எங்களைப் போலவே வேறு சேரிப்புறத்திற்கு சென்ற ஏனைய நண்பிகளும் எம்மைப்போலவே கருத்துக்களை முன்வைத்தனர். முதல் நாளே தொடர்ச்சியாண விரிவுரைகள் ஆரம்பத்தில் சலிப்பை ஏற்படுத்தினாலும் பின்னர் ஏதோ ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. புத்தாக்கப் பயிற்சியின் முதல் நாள் பெண்களால் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துஇ பாரதியார் பாடல்இ வேணு எனும் நண்பனால் பாடப்பட்ட கிராமிய அம்மா  பாடல் என்பன எனக்கு புது அனுபவத்தைத் தந்தது.


            அத்துடன் சென்னைப்பல்கலைக்கழக மாணவர்களுடன்  பெங்களுர் நோக்கிய புதிய பயணம். ஓர்இடத்தைப் பார்த்தவுடன் என்ன தோன்றுகின்றதோ முதல் மூண்று வார்த்தைகள் அடுத்து முப்பது வார்த்தைகள் அதைத்தொடர்ந்து முண்ணூறு வார்த்தைகள் அடுத்து தினக்குறிப்புக்களும் டயறி எழுதுவதும் சென்னைப் பல்கலைக்கழக மாணவன் ஒருவருடன் கதைத்து இந்திய இலங்கை தொடர்பாக என்ன கருத்துகிறார்கள் என்பதை கேட்டு 2500 வரிகளில் எழுதுவது என எமது வேலைகளோ வேறுசிந்தனைகள் வர விடாலும் தூக்கத்தை வராமலும் எம்மைத்தடுத்தது எனலாம். பெரியார் பல்கலைக்கழகத்தில்  முதல் முதலாக நடைபெற்ற முற்றம் நாடகம் மனதைக் கவர்ந்தாலும் கருத்துக்கூற எனக்கு வார்த்தை வரவில்லை முற்றம் நாடகத்தின் வழி நடத்துனர் வேணு நான் பஸ்ஸில் இருக்கும் போது என்ன சுஜி முற்றம் எப்புடி இருந்திசு நீ எதுவுமே சொல்லலயே எல்லாரும் ஒவ்வொண்ணு சொண்ணாங்க என்றதும் என்னால் வவ்வித வார்த்தையும் சொல்ல முடியாமல் போக ஆமா வேணு அண்ணா நல்லா இருந்திசு என்று சொன்னதும் போடி பொய் சொல்லாத நீயா வந்து சொல்லி யிருந்தால் நான் நம்பியிருப்பேன் இப்போ நான் கேட்டுத்தானே சொன்னா என்று சொன்னமையும் என்னால் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.  
அத்துடன் வீட்டில் விரும்பிய உணவுகளை உண்டு பழகிய எமக்கு இந்திய உணவு சில சமயம் அருவருப்பை ஏற்படுத்தினாலும் போகப் போகப் பழகிக் கொண்டது என்னால் தேனீர் குடிக்காமல் இருக்கவே முடியாது ஆனால் சென்ற 15நாட்களும் தேனீர் என்பது மருந்தாகவே கிடைத்தது. ஊட்டி பயணத்தின் போது எதிர்பாராத குளிர்; அத்தனைக்கும் மத்தியில் முற்றம் நாடகக் குளவினர் நடனம் செய்தமை எனக்கு புது உற்சாகத்தை தந்தது. அத்துடன் ஊட்டியில் உள்ள சேரி மக்களை சந்தித்ததும் புது அனுபவத்தை தந்தது அவர்களை இதுவரை தொலைக்காட்சியில் ; மட்டுமே பார்த்ததுண்டு நேரில் பார்த்ததும் அவர்களுடன் உரையாடியதும் புது அனுபவமாக இருந்தது. அம்மக்களது இருப்பிடத்தை நேரில் சென்று பார்த்ததுடன் அவர்களது வாழ்க்கை முறை தொடர்பாகவும் ஆலயங்கள் வீடுகள் என்பவற்றை நேரில் சென்று பார்த்தமையாணது இலகுவாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது அவர்களது ஆலயத்திற்குள் பெண்கள் செல்வதில்லை என்று கூறினர். ஆனால் தெரியாமல் நான் சென்றது ஏதோ ஒரு பயத்தை ஏற்படுத்தியது. ஆயவினை முடித்துக்கொண்டு கொண்டையுசி வழைவினூடாக அன்று இரவே வெளியேறினோம். 
 சென்றது பகல் என்பதனால்  கொண்டையூசி மலையூடாக சென்றமை தெரியவில்லை ஆனால் இரவு திரும்பியதால் வழைவினூடாக சென்றமை என்னால் உனர முடிந்தது சாடையாண தலைச்சுற்றும் ஏற்பட்டது நண்பர்கள் சிலர் வாந்தி எடுத்ததும் அதனைப்பார்க்க எனக்கும் வருமோ என பயந்ததும் புது அனுபவமாக இருந்தது . அடுத்து மைசூர் பலஸ் பிருந்தாவனத்தில் பார்க்க சென்ற போது தண்ணீர் நடனம் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காதது ஆனாலும் இரவு சென்றமையால் சில இடங்களை பார்க்க முடியாமல் போனது எனக்கு கவலையாக இருந்தது  மைசூர் மகாராயாவின் கலை ஆர்வத்தை புலப்படுத்தும் வகையில் அமைந்த கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை பேசின. ஆத்துடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த பழையமாணவர்கள் இருவர் வீட்டிறகு சென்றதும் புது அனுபவமாக இருந்தது.
 பெரியார் பல்கலைக்கழகத்திற்கும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கும் சென்றமையானது புது அனுபவமாக இருந்தது. அத்துடன் முற்றம் நாடகத்தின் சாட்டைக்குச்சியாட்டம் புதுமையாக இருந்தது. அத்துடன் வேணு எனும் மாணவனால் பாடப்பட்ட அம்மா பாடல் மிகவும் கவர்ந்தது எனக்கு யார் பாடியது என்று நினைவில்லாததனால் வேணுவிடமே சென்று அம்மா பாடல் பாடிய நண்பன் யார் என்று கேட்டதும் நான் கேட்டதும் வேணு நக்கலாக சிரித்ததும்  எனக்கு சிறு அவமாணமாக இருந்ததுடன் பின் தனது கலையைப்பற்றிக் கூறியதும் அவனது கலைப்பயணம் தொடர்பாக கூறியது புது அனுபவமாக இருந்நது. என் சக நண்பியின் அண்ணா இறந்துவிட்டதாக வந்த தவறாண தொலை பேசி தகவலைக்கேட்டு நண்பி கதறியதும் ஆறுதல் கூறுவது என்று 1.00 மணி வரை நித்திரை வராமல் இருந்ததும் மறக்க முடியாதது.  
இரவு கலந்துரையாடல் சிலநாட்கள் நடக்க முடியாமல் போனது. காரணம் தங்கிய இடம் கிறிஸ்தவர்களது தங்குமிடம் எனவே அங்கு சத்தங்கள் எழுப்பக்கூடாதது என்று ஏற்கனவே எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பும் வரை எம்மால் எடுத்து வைக்கப்பட்ட ஒவ்வொரு அடியும் ஏதோ ஒரு அனுபவத்தைத் தந்ததுடன் புதுப் புது விடயங்களையும் கற்றுத்தந்தது நேர முகாமைத்துவம் தொடர் பயணம் தூக்கமின்மை வித்தியாசமாண பேச்சு வழக்கு தமிழாக இருந்தாலும் சில சமயம் புரியாமல் போனது போகப் போக புரிந்தது கொள்ளக்கூடியதாக இருந்தது. என் நண்பிக்கு அவர்களது தமிழும் இவர்களது தமிழ் நண்பிக்கும் புரியாமல் போக சில சமயம் மொழி பெயர்க்க வேண்டி வந்ததும். பல தரப்பட்ட மக்கள் பாதை வழியே பல நாள் நடை பயணம் அருமையாக கிடைக்கும் தேனீர் விரும்பா விட்டாலும் சில சமயம் கட்டாய உணவு என ஒவ்வொரு நினைவுகளும் ஒவ்வொரு அனுபவமாக மாறியது. திரும்பி வரும்போது போய் வாறன் என்று கூட கூறமுடியாமல் அவசர இவசரமாக புறப்பட்டதும் என இந்திய பயணம் பல விடையங்களை கற்றுத்தந்தது. 

    
















     

 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..