வீதி ஓரங்களில் புடைவை வியாபாரம்

 வியாபாரம் என்பது அனைத்து மக்களது தேவைகளையும் பூர்த்தி செய்வதாகும். புடைவை வியாபாரம் என்பது விசேட காலங்களில் களைகட்டிக் காணப்படும். தமிழ் மக்களது பாரம்பரிய விழாக்களின் போது யாழ்ப்பாணத்தில் ஆடை வியாபாரம் அமோகமாக நடைபெறும.; இவ்வாறான விசேட தினங்களை கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணத்தில் கிராமப்புறங்களில் இருந்து நகரப்பகுதிக்கு வந்தே பொருட்களைக் கொள்வனவு செய்வார்கள் பொதுவான நாட்களில் வியாபாரம் மந்த நிலையில் காணப்படுவதனால் வியாபாரிகளுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை இருப்பினும் சிலர் திருமணம்,பிறந்தநாள் என்று பல தேவைகளுக்காக வாங்கவருவதுமுண்டு.


வீதி ஓரங்களில் புடைவைக்கடைகளையோ அல்லது வேறு நடைபாதை வியாபாரங்களையோ வைத்திருப்பதனால் வாகனங்கள் வீதியில் வேகமாக போகும் போது வீதி ஓரங்களில் உள்ள குப்பை,தூசுகள் மேல் எழுந்து காற்று வீசும் திசைக்குச் செல்லும் போது வியாபார பொருட்களின மீது தூசுகள் படியும். இதனால் வியாபாரிகள் மட்டுமன்றி கொள்வனவு செய்வோரும் நஷ்டத்தை எதிர் நோக்குவர். கிராமப்பகுதி மக்கள் உடுபுடைவைகளைக் கொள்வனவு செய்வதற்கு நகரத்துக்கு வர வேண்டிய தேவையும் குறைந்து கொண்டே வருகின்றது காரணம் கிராமப்பகுதிகளில் தற்போது வீதியோரங்களில் வியாபாரம் நடைபெறுகின்றது இதனால் யாழ்ப்பாணத்தில் பெரிய கடைகள் வைத்திருப்பவர்கள் தமது வேலையாட்கள் சிலரிடம் ஆடைகளை கொடுத்து விற்பனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் திருவிழாக்கள் சந்தைகள் போன்றவற்றில் இவ்வியாபாரங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.






















 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..